அனைவரையும் ஆச்சரியப் படுத்திய சிறுவர்கள்.

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் திங்கள், 7 செப்டம்பர், 2009
மட்டக்களப்பு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் பல வருடங்களாக நம் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளிலே பல்வேறு பட்ட செயத்திட்டங்களிலே ஈடுபட்டு வருகின்றது அதிலும் குறிப்பாக பல்வேறு காரணங்களினால் பாடசாலையினை விட்டு இடை விலகிய மாணவர்களின் எதிர் காலம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருவதோடு பல செயத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இன்று மறைந்து வரும் தமிழர் நம் கலைகளை வளர்ப்பதிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வருடா வருடம் சிறுவர் கலை விழாவினையும் நடாத்தி வருகின்றது


இவ வருடத்துக்கான கலை விழாவானது 05.09.2009 சனிக்கிழமை மாலை 05.31 க்கு ஆரம்பமானது. (அழைப்பிதழிலே குறிப்பிடப் பட்டதுபோல் சரியாக 05.31 க்கே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.) இந் நிகழ்விலே பல துறை சார்ந்த்தவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறார்களின் திறமைகளைக் கண்டு வியந்து போனார்கள்.


மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ் மொழி வாழ்த்து என்று ஆரம்பமான நிகழ்ச்சிகள் நான்கு மணித்தியாலங்கள் பார்வையாளர்கள் ஒருத்தரைக்கூட எழுந்து செல்ல முடியாமல் தங்கள் வசம் ஈர்த்திருந்தார்கள் சிறுவர்கள். இன்று பார்வையாளர்களை இறுதி வரை வைத்துக் கொள்வதென்பது முடியாத காரியம் ஆனால் இந்தச் சிறுவர்களால் முடிந்துவிட்டது.


இன் கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான கரகம், கும்மி, கோலாட்டம் வில்லிசை, நாடகம்..... என்று எல்லோரையும் மகிழ்வித்தனர்.


இங்கே குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும். சிறுவர்களால் மேடை ஏற்றப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலுமே எமது பங்களிப்பு இருக்கவில்லை. நாடகமானாளும்சரி, நடனமானாலும் சரி அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது. நாங்கள் மேற் பார்வை செய்தது மட்டுமே. அவர்களின் திறமைகளைக் கண்டு வியப்படைந்து விட்டோம்.


இந்த கலைவிழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அடியேன்தான். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டன. (அறிவிப்பு ) ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்தது நான் இல்லை எட்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிதான்.
அடியேன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கின்றேன்.







பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.











எமது கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர்.
இன்றைய தினக்குரல் பத்திரிகையிலே. சிறுவர் கலைவிழா தொடர்பான படங்களும், செய்திகளும் வெளிவந்தது இருக்கின்றன. தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள்

(சிறுவர் கலைவிழா வீடியோ விரைவில் உங்களை வந்து சேரும்)

0 கருத்துகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

naazhaya ulahil siruvarkal

எம்மைப் பற்றி

  • எம்மைப் பற்றி - கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கல்வி, கலை, கலாசாரத்துறைகளில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி பலரதும்மனதில் இடம் பிடித்த ஒரு சமுக சேவை அமைப்பாக கல்வி அபிவிரு...
    14 ஆண்டுகள் முன்பு

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இன்றைய உடனடித் தேவைகள்

01. கல்வி நிலையத்துக்கு நிரந்தரமான காணியும், கட்டடமும்

02. வாசிகசாலையும், அதற்கான புத்தகங்களும், தளபாடங்களும்.

03. போட்டோ பிரதி இயந்திரம்.

04. மின் பிறப்பாக்கி.(ஜெனறேட்டர்)

05. மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள், காகிதாதிகள்.

06. காரியாலய தளபாடங்கள்.

07. கணனித்தொகுதி (computer unit )

இலவச இரவு நேர வகுப்புக்களில் பங்கு கொள்ளும் மாணவர் விபரம்.

கற்கை நேரம் : மாலை 4.௦௦ - இரவு 8.௦௦

தரம் 06 - 105
தரம் 07 - 106
தரம் 08 - 90
தரம் 09 - 45
மொத்தம் - 346

வருடாந்த முக்கிய நிகழ்வுகள்.

01. ஜனவரி முதல் வாரம் :- இலவச வகுப்புக்களுக்கான மாணவர் அனுமதியும், தரப்படுத்தல் பரீட்சைகளும்

02. ஏப்ரல் :- கல்வி சுற்றுலா

03.ஜூலை :- மாபெரும் சிறுவர் கலைவிழா.

04 . டிசெம்பர் :- சிறுவர் விளையாட்டு விழாவும், கலை நிகழ்சிகளும்.

இரவுநேர இலவச வகுப்பின்போது

இரவுநேர இலவச வகுப்பின்போது

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா 2008

சிறுவர் கலைவிழா 2008

விளம்பரங்கள்